தூத்துக்குடி மாவட் டம் புதியம்புத்தூரை சேர்ந்தவர் ஜெயபால். லாரி டிரைவரான இவரது மனைவி காணியம்மாள் (வயது30). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயபால் விபத்தில் இறந்துவிட்டார். இதையடுத்து காளியம்மாள் தனது மகள் மற்றும் இரண்டு ஆண் பிள்ளை என மூன்று பேருடன் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 29-ம் தேதி மாலை காளியம்மாள் அவரது வீட்டில் பின் பகுதியில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் விசாரணையில் சொத்துக்காக உறவினர்களே கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.இதுபற்றி போலீசார் தரப்பில் தெரிவித்த தகவலை பார்ப்போம்…
கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் ராமச்சந்திரன் (28), இவரது சகோதரி விஜயலட்சுமி (30), தனது தந்தையின் இரும்புக்கடை வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார். ராமச்சந்திரன், கணவன் இறந்த நிலையில் பிள்ளைகளுடன் தனியாக தவித்து வந்த புதியம்புத்தூரை சேர்ந்த காளியம்மாளை 2வது திருமணம் செய்துள்ளார். இதற்கு லட்சுமணன் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் ராமச்சந்திரன் மட்டும் கோவையில் தனியாக வசித்தபடி அவ்வப்போது புதியம்புத்தூரில் உள்ள காளியம்மாள் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில், ராம்சந்திரன் சகோதரி விஜயலட்சுமி, தனது அத்தையான விளாத்திகுளம் ஓடைத்தெருவை சேர்ந்த கவிதா (44) என்பவரை தொடர்பு கொண்டு காளியம்மாள், ராமச்சத்திரனை 2வது திருமணம் செய்து கொண்டதால் தந்தையின் சொத்தில் பாதி காளியம்மாளுக்கு சென்றுவிடும் என்பதால் கூலிப்படையை ஏவி காணியம்மாளைகொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதையடுத்து கவிதா தனது உறவினரான மாமு நயினார்புரம் விவேக் (24) என்பவர் மூலம் கீழ விளாத்திகுளத்தை சேர்ந்த ஜெயபாலன் (24) என்பவரை தொடர்பு கொண்டார்.
இவருடன் தனது கடை ஊழியர் புத்தூர் நடுவக்குறிச்சியை சேர்ந்த கலைச்செல்வன் (24) என்பவரை செல்போன் மூலம் பேசிய விஜயலட்சுமி, காளியம்மாளை தீர்த்து கட்டினால் ரூ.3 லட்சம் பணம் தருவதாக கூறியுள்ளார். முதற்கட்டமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ.50 ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களுக்கு முன் விஜயலட்சுமி, கவிதா வங்கி கணக்கு மூலம் ரூ.20 ஆயிரத்தை அனுப்பி ஜெயபாலனுக்கு கவிதா கொடுத்துள்ளார்.
இதையடுத்து கடந்த பிப்ரவரி 29ம் தேதி பைக்கில் புதியம்புத்தூர் சென்ற ஜெயபாலன், காளியம்மாள் வீட்டிற்கு சென்று கால்நடை மருத்துவர் என அறிமுகப்படுத்திக்கொண்டு நாய்களுக்கு ஊசி போட வேண்டுமா? என கேட்டுள்ளார். அதற்கு காளியம்மாள் சரி எனக்கூறவே நாயை குறைக்காதபடி பிடித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, மருந்து எடுத்து வருவதாக கூறி வெளியே சென்றுள்ளார். ஏற்கனவே தான் பைக்கில் மறைத்து வைத்திருந்த கயிற்றை மறைவாக எடுத்து வந்த ஜெயபாலன், காளியம்மாளின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்டு தப்பியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, போலீசார், விஜயலட்சுமி (55), கவிதா (44), ஜெயபாலன் (24), கலைச்செல்வன் (27), விவேக் (24) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
GIPHY App Key not set. Please check settings