in

விஜயலட்சுமி 7 முறை கருக்கலைப்பு செய்துள்ளார்: சீமான் மீதான புகாரை ரத்து செய்ய முடியாது: உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை:

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய முடியாது எனக் கூறிய உயர் நீதிமன்றம் சீமான் தொடர்ந்த வழக்கை ஏற்கனவே தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
காவல்துறை மற்றும் சீமான் வழக்கறிஞர் ஆகியோர் வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, எதற்காக வழக்கைத் திரும்பப் பெற்றார்?. சீமானின் முதல் மனைவி விஜயலட்சுமியா?. வழக்கைத் திரும்பப் பெறுவதாகப் புகார்தாரர் கூறினாலும் காவல்துறைக்கு பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளது. சர்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது. மிரட்டலின் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்பப் பெற்றுள்ளது தெளிவாகிறது. விஜயலட்சுமி வாக்குமூலத்தில் கூறியுள்ள புகார்கள் சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துகிறது. சீமான் வற்புறுத்தலினால் ஆறு, ஏழு முறை விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்துள்ளது தெரியவந்துள்ளது. விஜயலட்சுமியிடமிருந்து பெருந்தொகையைச் சீமான் பெற்றுள்ளதாக விஜயலட்சுமியின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வழக்கை ஆராய்ந்தபோது நடிகை விஜயலட்சுமிக்கு, சீமான் மீது எந்த காதலும் இல்லை. குடும்ப பிரச்சினை, திரைத்துறை பிரச்சினை காரணமாகச் சீமானை விஜயலட்சுமி குடும்பத்தினர் அணுகி உள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நடிகை விஜயலட்சுமி உடன் சீமான் உறவு வைத்துள்ளார். பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது. அதைத் தன்னிச்சையாகத் திரும்பப் பெற முடியாது. எனவே, சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. புகார் மீதான விசாரணையை முடித்து 12 வாரங்களுக்குள் போலீசார் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரன், 7 திருட்டு வழக்குகளில் மீண்டும் கைது