in ,

திருமலா பால் நிறுவனத்தின் மேலாளர் ரூ.40 கோடி கையாடல் இவர் கொலையா? தற்கொலைய? காவல்துறை தீவிர விசாரணை..

சென்னை:
​ஆந்​திர மாநிலம் கிருஷ்ணா மாவட்​டம் வையூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் நவீன் பொலினேனி (37வயது). திரு​மண​மாகி குடும்​பத்​துடன் சென்னை புழல் அடுத்த பிரிட்​டானியா நகர் அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் வசித்து வந்​தார். இவர் சென்​னை​யில் உள்ள திரு​மலா பால் நிறு​வனத்​தில் கடந்த மூன்​றரை ஆண்​டு​களாக கரு​வூல மேலா​ள​ராகப் பணி​யாற்றி வந்​தார். அண்​மை​யில் திரு​மலா பால் நிறு​வனம் அவர்​களது நிறுவன வரவு-செலவு கணக்​கு​களை சரி​பார்த்து தணிக்கை செய்​துள்​ளது. ரூ.40 கோடி முறை​கேடு நடை​பெற்​றிருப்​பது தெரிய​வந்​தது. நவீன் அந்த பணத்தை கையாடல் செய்​த​தாக​வும் அந்த பணத்தை அவரது குடும்​பத்​தினர் மற்​றும் நண்​பரின் வங்கி கணக்​குக்கு மாற்றி மோசடி​யில் ஈடு​பட்​ட​தாக​வும் குற்​றம்சாட்டப்பட்டது. அந்​நிறு​வனம் சார்​பில் கொளத்​தூர் காவல் மாவட்ட துணை ஆணை​யரிடம் புகார் தெரிவிக்​கப்​பட்​டது. காவல்துறையினர் நவீனை நேரில் வரும்​படி போனில் அழைத்து விசா​ரித்​த​தாக​வும் அப்​போது பணத்தை திருப்பி கொடுத்து விடு​கிறேன். என் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டாம் என காவல்துறையினரிடம் நவீன் கெஞ்சி கேட்​டு கொண்​ட​தாக​வும் கூறப்​படு​கிறது. அவர் வீட்​டருகே உள்ள குடிசை​யில் தூக்​கில் தொங்​கிய நிலை​யில் சடலமாக கிடந்​தார். தகவல் அறிந்து புழல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்​று நவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்​காக ஸ்டான்லி அரசு மருத்​து​வ மனைக்கு அனுப்பி வைத்​தனர். காவல்துறையினரின் விசா​ரணைக்கு பயந்து நவீன் தற்​கொலை செய்து கொண்​டா​ரா? அல்​லது யாரேனும் அவரை கொலை செய்து தூக்​கில் தொங்க விட்​டன​ரா? என்​பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

தக்​கலையில் இளம் பெண்னை ஜெபம்என்ற பெயரில் பாலியல் தொல்லை போதகர் கைது..

பட்டினப்பாக்கம் உல்லாசவிடுதியில் துணை நடிகர்கள் வழக்கறிஞர் கஞ்சா போதையில் ஆடல் பாடலில் சம்மந்தப்பட்டவர்கள் கைது..