in ,

பட்டினப்பாக்கம் உல்லாசவிடுதியில் துணை நடிகர்கள் வழக்கறிஞர் கஞ்சா போதையில் ஆடல் பாடலில் சம்மந்தப்பட்டவர்கள் கைது..

சென்னை:
​சென்னை எம்​ஆர்சி நகரில் உள்ள பிரபல​மான ஓட்​டலில் கஞ்சா விருந்து நடப்​ப​தாக பட்டினப்பாக்கம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து சம்​பந்​தப்​பட்ட ஓட்​டலுக்​குள் காவல்துறையினர் திடீரென நுழைந்து அறை​களைப் பார்​வை​யிட்​டனர். அப்​போது ஓர் அறை​யில் இளைஞர்​கள் கும்​பலாக சினிமா பாடல்​களை ஒலிக்​க​விட்டு நடனம் ஆடிக்கொண்​டிருந்​தனர். அவர்​களிடம் விசா​ரித்​த​போது, அவர்​கள் கஞ்சா போதை​யில் நடன​மாடியது தெரிய​வந்​தது. இதையடுத்து அங்கு கொண்​டாட்​டத்​தில் ஈடு​பட்​டிருந்த சென்னை சூளை ஜெகதீஸ்​வர்​(வயது 34), கொளத்​தூர் சந்​தோஷ்(வயது 27), அம்​பத்​தூர் தீபக்​(வயது 27), காமேஷ்(வயது 25), புழல் சூரப்​பட்டு அக்சய் ராஜீ(வயது 21), திரு​வள்​ளூர் ரோகித்​(வயது 21), கிருஷ்ணபரிக்​(வயது 20), ஜிலான் (வயது 28), சரத்​கு​மார்​(வயது 32), பூந்​தமல்லி மதன்​கு​மார்​(வயது 29) ஆகிய 10 பேரையும் காவல்துறையினர் கைது செய்து காவல் நிலை​யம் அழைத்​துச் சென்​றனர். அவர்​களிட​மிருந்து கஞ்​சா, உயர் ரக கஞ்சா ஆயில் பறி​முதல் செய்​யப்​பட்​டன. விசா​ரணை​யின் போது கைது செய்​யப்​பட்ட ஜெகதீஸ்​வர் கடந்த சில நாட்​களுக்கு முன்​னர் காதல் திரு​மணம் செய்​துள்​ளார். இதைக் கொண்​டாடும் வகை​யில் அவர் நண்​பர்​களுக்கு ஓட்​டலில் விருந்து வைத்​துள்​ளார். அப்​போது கஞ்சா பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளது. ஜெகதீஸ்​வர் சினி​மா​வில் நடித்​துள்​ளார் எனவும் அவருடன் கைதானவர்​களில் சிலர் வழக்​கறிஞர், யூடியூபர், பிசி​யோதெரபி உட்பட பல்​வேறு பணி​களைச் செய்​து​வரு​வது தெரிய​வந்​த​தாக காவல்துறையினர் தெரி​வித்​தனர்​.

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

திருமலா பால் நிறுவனத்தின் மேலாளர் ரூ.40 கோடி கையாடல் இவர் கொலையா? தற்கொலைய? காவல்துறை தீவிர விசாரணை..

நாமக்கல் வாலிபர் தற்கொலை பல மோசடி திருமண செய்த பெண் உட்பட ஆறு பேர் கைது..