in ,

திருவள்ளூர் மாவட்ட காவல் துறையை ஆவடி மாநகர காவல்துறையுடன் இணைக்கப்பட வேண்டும்!

செங்கை மேற்கு மாவட்ட காவல்துறை மாவட்ட பிரிவிற்கு பின்பு திருவள்ளூர் மாவட்ட காவல்துறை என பிரிக்கப்பட்டது இம் மாவட்ட காவல் துறையில் திருவள்ளூர் திருத்தணி பொன்னேரி கும்மிடிப்பூண்டி ஊத்துக்கோட்டை என ஆறு காவல் உட்கோட்டங்களாக பிரிக்கப்பட்டு சட்டம் ஒழுங்கை செம்மைப்படுத்துவார்கள் என்ற நினைப்பில் தமிழக உள்துறை செயலாளர் அமுதாவும் தமிழக காவல்துறை இயக்குனர் சங்கர் ஜீவாலும் நினைத்து கொண்டிருக்கின்றனர் ஆனால் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்று ஆந்திர மாநிலத்தை ஒட்டி உள்ள இந்த மாவட்டம் எதுவும் சொல்லிக் கொள்கின்ற மாதிரி இல்லை திருத்தணி டிஎஸ்பி நமக்கே வம்பு என்கிற மாதிரி செயல்படுகிறார் இந்த உட்கோட்டத்தில் ஸ்பெஷல் டீம் சிறப்புசப் இன்ஸ்பெக்டர் குமார் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை இதே நிலைதான் கும்மிடிப்பூண்டி சப் டிவிஷனும் ஏகப்பட்ட சமூக விரோத செயல்களும் கொடி கட்டி பறக்கின்றன திருவள்ளூர் சப் டிவிஷனில் போலீசாரோ சார் எங்களுக்கு இந்த மாவட்டத்தில் வேலை செய்ய விருப்பமில்லை என நேர்மையான காவல்துறையினர் அழுது புலம்பகின்றனர் இவர்களுக்கு ஒத்து ஊதுகின்றனர்

திருவள்ளூர் மாவட்ட எஸ் பி சி ஐ டி என்ன செய்வது அவர்கள் கேட்டு வந்தது அப்படி தான் நாம் ஏற்கனவே சங்கர் ஜீவா ல் என்ன மாவட்டத்தின் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் மாவட்ட போலீஸ் முழுவதையும் ஆவடி காவல் ஆணையகரத்தோடு இணைத்து சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த வேண்டும் ரெவென்யு மாவட்டம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட வேண்டும் அப்படி செய்தால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள் இதை உள்துறை செயலாளர் அமுதாவும் காவல்துறை இயக்குனர் சங்கர் ஜீவாலும் செய்ய வேண்டும் இவர்களுக்கு உறுதுணையாக உளவு பிரிவு ஐஜி செந்தில் வேலனும் செயல்பட வேண்டும்.

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

J8 நீலாங்கரையில் போதைப்பொருள் விற்பனையை தடுக்கவும் மற்றும் அதை குறித்து விழிப்புணர்வு!

கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட நபர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.