in ,

கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட நபர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தாம்பரம், அக்,01:- கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட நபர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தாம்பரம் ரங்கராஜ புரத்தை சேர்ந்தவர்கள் காசிம்(வயது 45), முகமதுகனி( வயது 52). கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்களை நாடி வந்த அவர்களின் நண்பர் ஷானாவாஸ்கான் என்பவர் தொழில் செய்ய பணம் வேண்டும் என்றும், இரண்டு மாதத்திற்குள் திருப்பிக் கொடுத்துவிடுவதாக கூறி இருவரிடமும் ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் ரொக்க பணமாக வாங்கி சென்றார்.


இரண்டு மாதம் கழித்து பணம் கொடுத்த காசிம்,முகமது கனி ஷானாவாஸ்கானிடம் பணத்தை திருப்பிக் கேட்டபோது, அவர் சாக்கு சொல்லி நாள் கடத்தி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில், பொறுமை இழந்த சகோதரர்கள் பணம் கேட்டு நிர்பந்திக்க தொடங்கினார்கள்.

இதனால் ஆத்திரமடைந்த ஷானாவாஸ்கான் காசிம் முகமது கனி ஆகிய இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி, ஆபாசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இது குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், இணை ஆணையர் மூர்த்தி மேற்பார்வையில் துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி தலைமையில் தலைமறைவாக இருந்த ஷானாவாஸ்கானை தாம்பரம் போலிசார் கைது செய்து அவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

திருவள்ளூர் மாவட்ட காவல் துறையை ஆவடி மாநகர காவல்துறையுடன் இணைக்கப்பட வேண்டும்!

போதையில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு மாரத்தான்-2023, பாகம்-2 ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைக்கிறார் திரு.சந்தீப் ராய் ரத்தோர்