மீரட்:
கூடுதல் வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தி, மருமகளுக்கு எய்ட்ஸ் ஊசி செலுத்திய மாமியார் சிக்கினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் முரட்டைச் சேர்ந்த 30 வயது பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. இந்த திருமணத்துக்குப் பெண் வீட்டுத் தரப்பிலிருந்து 45 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டது. மேலும் 15 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகளும் வரதட்சணையாக வழங்கப்பட்டன .
திருமணம் முடிந்த சில நாட்களுக்குப் பின்னர் அந்த பெண்ணுக்கு அவரது மாமியார் வரதட்சணை கொடுமை கொடுக்கத் தொடங்கினார். மேலும் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக அவரது தந்தை வீட்டுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இந்த விவகாரம் ஊர்த் தலைவர்களுக்குத் தெரியவந்ததால், இரு வீட்டாரையும் அழைத்துப் பேசி, அந்த பெண்ணை கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரம் அடைத்த மாமியார், தனது மருமகளுக்கு எய்ட்ஸ் கிருமியை ஊசி மூலம் செலுத்தி உள்ளார். இதனால் மருமகளின் உடல்நலம் பாதிக்கப்பட்டது என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு எச்.ஐ.வி. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தனது மகளுக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து நீதிமன்றத்தில், அப்பெண்ணின் தந்தை வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த கொடுஞ்செயலைச் செய்த மாமியார் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்
GIPHY App Key not set. Please check settings