in ,

செங்குன்றம் பாடியநல்லூர் அருகில் ரூ.3 கோடி மதிப்புடைய நிலத்தை அபகரித்த குற்றவாளி13 ஆண்டுகள் பிறகு கைது..

சென்னை:
பெரவள்ளூரைச் சேர்ந்தவர் ஜோதிடர் சிவகுமார். இவருக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்புடைய காலிமனை திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் அருகில் விஜயநல்லூரில் இருந்தது. இதை சிலர் போலி ஆவணங்கள் தயார் செய்து ஆள் மாறாட்டம் மூலம் அபகரித்து வேறு நபருக்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டனர். சிவகுமார் இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் 2012-ம் ஆண்டு புகார் தெரிவித்தார். அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இந்த மோசடி தொடர்பாக கிருஷ்ணன் என்பவரை அதே ஆண்டில் கைது செய்தனர். இந்த மோசடிக்கு காரணமாக இருந்த விருதுநகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 64) தலைமறைவானார். இந்நிலையில், 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் திருவல்லிக்கேணியில் பதுங்கி இருகிறார் என தெரிந்து அவரை கைது செய்து நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

திருப்பூரில் பயங்கரம்! இந்து முன்னணி பிரமுகர்படு கொலை! குற்றவாளிகள் தப்பி ஓட்டம்! தனிப்படை தீவிர விசாரணை

காவல்துறையைச்சார்ந்த ஆறு பேர் கோவில் காவலாளி மரணத்திற்க்காக பணி நீக்கம்