
திருப்பூர்:
திருப்பூர் குமரானந்தபுரம் காமராஜர் வீதியில் வசித்து வந்தவர் பாலமுருகன்(வயது 30). பனியன் தொழில் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினராக இருந்தார். அவரது வீட்டின் அருகே நண்பர்கள் மூன்று பேருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் பாலமுருகனை அரிவாளால் வெட்டினர். அதைத்தொடர்ந்து அங்கிருந்து தப்பித்து ஓட அவர் முயற்சித்தபோது அந்தக் கும்பல் விரட்டிச் சென்று வெட்டிக் கொலை செய்தது. திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக கொலையின் போது உடனிருந்த நண்பர்கள் மூன்று பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பாலமுருகனின் உடல் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டதைத் தொடர்ந்து கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி இந்து முன்னணியினர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
GIPHY App Key not set. Please check settings