in ,

காவல்துறையைச்சார்ந்த ஆறு பேர் கோவில் காவலாளி மரணத்திற்க்காக பணி நீக்கம்

சிவகங்கை:
திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தனியார் நிறுவனம் மூலம் அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (வயது 27) காவலாளியாக பணிபுரிந்தார். மதுரையை சேர்ந்த சிவகாமி (வயது 75) என்பவர் தனது மகள் நிகிதாவுடன் சாமி கும்பிட காரில் வந்தார். சிவகாமி நடக்க முடியாததால் காவலாளி அஜித்குமார் சக்கர நாற்காலி எடுத்து வந்து கொடுத்தார். அப்போது காரை பார்க்கிங் செய்யுமாறு நிகிதா தெரிவித்தார். அஜித்குமாருக்கு கார் ஓட்ட தெரியாது என்பதால், மற்றொருவர் உதவியுடன் காரை பார்க்கிங் செய்துவிட்டு சாவியை நிகிதாவிடம் கொடுத்தார். வழிபாடு முடிந்து சிவகாமி, நிகிதா ஆகியோர் காரில் ஏறியபோது பையில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த 10 பவுன் நகையை காணவில்லை. இதுகுறித்து திருப்புவனம் காவல்துறையில் நிகிதா புகார் தெரிவித்தார். தொடர்ந்து அஜித்குமார் உள்ளிட்ட சிலரை அழைத்து சென்ற காவல்நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அஜித்குமாரை தவிர்த்து மற்றவர்களை உடனே அனுப்பிவிட்டனர். பின்னர் அஜித்குமாரை காவல் நிலையத்தில் இருந்து அனுப்பிவிட்டனர். வெளியே வந்த அவரை மீண்டும் மானாமதுரை உட்கோட்ட தனிப்படை காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது அஜித்குமாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அன்று இரவு அவரது உடல் மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக பிஎன்எஸ் 196 பிரிவின் கீழ் திருப்புவனம் காவல்துறையினர் வழக்கு பதிந்தனர். தொடர்ந்து மானாமதுரை உட்கோட்ட தனிப்படையைச் சேர்ந்த காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய ஆறு பேரை சஸ்பெண்ட் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இச்சம்பவம் குறித்து திருப்புவனம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் விசாரணை நடத்தினார். இந்நிலையில் பிரேத பரிசோதனை செய்வதற்கு அஜித்குமார் உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். அவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சிவகங்கை கோட்டாசியர், வட்டாட்சியர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அஜித்குமாரை கடுமையாக தாக்கி கொலை செய்த காவலர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தெரிவித்தனர். காவலர்களை ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். குடும்பத்தில் ஒருவருக்கு கோவிலில் வேலை தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தரப்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் தருவதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர். பின்னர் அவர்களை சமரசப்படுத்திய காவல்துறையினர் அஜித்குமாரின் தாயார், சகோதரரை காவல்துறை காரில் ஏற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

செங்குன்றம் பாடியநல்லூர் அருகில் ரூ.3 கோடி மதிப்புடைய நிலத்தை அபகரித்த குற்றவாளி13 ஆண்டுகள் பிறகு கைது..

மூன்று மாதத்தில் மணப்பெண் தற்கொலை கணவர், மாமனார், மாமியார் மூன்று பேர் கைது..