in ,

செம்மரக்கடத்தல் மன்னன் வெங்கடேசன் என்ற மிளகாய் பொடி வெங்கடேசன் குண்டர் சட்டத்தில் கைது..

சென்னை:
பிரபல ரவுடி மிளகாய்ப் பொடி வெங்கடேசன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். செங்குன்றம், பாடியநல்லூரைச் சேர்ந்தவர் கே.ஆர் வெங்கடேசன் என்ற மிளகாய் பொடி வெங்கடேசன். செங்குன்றம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்தார்.
இவர் மீது ஆவடி காவல் ஆணையர் அலுவலுகத்தில் 5 வழக்குகளும், ஆந்திர மாநிலத்தில் 49 வழக்குகளும் உள்ளன. இந்நிலையில், இவர் மீது கடந்த 12-ம் தேதி, முகலிவாக்கம், குமுதம் நகரைச் சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி (வயது 41) என்பவர், செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், மிளகாய் பொடி வெங்கடேசன் தன்னை மிரட்டி ரூ.1 லட்சம் முன்பணமாக வாங்கியதாகவும், மேலும், ரூ.12 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் செம்மரக்கடத்தல் மன்னன் வெங்கடேசன் கடந்த 13-ம் தேதி கைது செய்யப்பட்டார். வெங்கடேசன் மீது மிரட்டி பணம் பறித்தல், கட்ட பஞ்சாயத்து செய்தல் செம்மரக்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். வெங்கடேசன் தமிழக பாஜக பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில செயலாளராக இருந்த அவரை கட்சியை விட்டு, மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சியையில் இருந்து நீக்கினார்.

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சென்னை மாநகரில் காவல் ஆணையர் அதிரடி உத்தரவு! சரித்திர பதிவேட்டில் இருக்கும் 30 ரவுடிகள் கைது..

பெண் வழக்கறிஞருக்கு பாலியல் தொல்லை! தனியார் பயிற்சி மைய இயக்குநர் கைது..