in ,

காதலர்கள் கள்ள உறவில் பிறந்த குழந்தையை வைத்து நாடகம் காவல்துறை தீவிர விசாரணை..

சென்னை:
சென்னை ஓமந்​தூ​ரார் அரசு மருத்​து​வ​மனைக்கு கையில் கட்​டைப்​பை​யுடன் இளைஞர் ஒரு​வர் வந்​தார். அந்த கட்​டைப்​பையை அங்கு பாதுகாப்பு பணி​யில் இருந்த காவலரிடம் அவர் கொடுத்​தார். அதை வாங்கி பார்த்த காவலர் கட்​டைப்​பை​யில் பச்​சிளம் குழந்தை இருந்​ததை கண்டு அதிர்ச்சி அடைந்​தார். அந்த இளைஞர் நான் சாலை​யில் நடந்து சென்று கொண்​டிருந்​தேன். கட்​டைப்​பை​யில் இந்த குழந்தை கீழே கிடந்​தது என தெரி​வித்​தார். இதையடுத்து காவலர் அந்த இளைஞரிடம் குழந்தை எந்த இடத்​தில் கிடந்​தது? எப்​போது பார்த்​தீர்​கள்? என கேள்வி​களை எழுப்ப இளைஞர் முன்​னுக்கு பின் முரணான பதில்​ அளித்ததால் சந்​தேகமடைந்த காவலர் அந்த இளைஞரை விசா​ரிக்க தொடக்கினார் அவர் இந்த குழந்தை எனக்கு பிறந்​தது தான் உங்​களிடம் பொய் சொல்​லி​விட்​டேன் என கூறி கதறி அழு​தார். குழந்​தையை கொண்டு வந்த இளைஞர் பெயர் பிர​வீன்​(21வயது). ஊட்​டி​யில் உள்ள கல்​லூரி​யில் படித்த போது அதே கல்​லூரி​யில் படித்த சேலத்தை சேர்ந்த (21வயது) மாண​வி​யுடன் பழக்​கம் ஏற்பட்டு இரு​வரும் காதலித்து வந்​துள்​ளனர். பிர​வீன் அரசு வேலைக்​காக சென்னை சைதாப்​பேட்​டை​யில் தங்கி படித்து வருகிறார். மாண​வி கிண்​டி​யில் உள்ள விடு​தி​யில் தங்கி சென்னை பல்​கலைக்​கழகத்​தில் எம்​எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வரு​கிறார். சென்​னை​யில் இருந்​த​தால் இரு​வரும் அடிக்​கடி சந்​தித்து வந்​தனர். இதனால் மாணவி கர்ப்​பமடைந்​துள்ளார். விடு​தி​யில் இருந்த மாணவிக்கு பிரசவ வலி ஏற்​பட்​டது. மாண​வி​யின் தோழிகள் விடு​முறைக்கு ஊருக்கு சென்​ற​தால் விடுதி கழி​வறை​யிலேயே மாணவி குழந்​தையை பெற்​றெடுத்​தார். இதுகுறித்து தனது காதலன் பிர​வீனுக்கு தகவல் தெரி​வித்​தார். இரு​வரும் திரு​வல்​லிக்​கேணி லாட்​ஜில் அறையெடுத்து தங்​கினர். இந்த விவ​காரம் வெளி​யில் தெரிந்​தால் அவமான​மாகி விடும். இரு​வருக்​கும் வேலை​இல்​லை. குழந்தை கீழே கிடந்​த​தாக கூறி காவல்துறையில் ஒப்​படைத்​து​விடு​வோம் என முடிவு செய்​து கட்​டைப்​பை​யில் குழந்​தையை எடுத்து கொண்டு ஓமந்​தூ​ரார் மருத்​து​வ​மனைக்கு வரும் போது பிர​வீன் சிக்​கிக் கொண்​டார். தற்​போது குழந்​தை​யும் மாண​வி​யும் கஸ்​தூரி​பாய் காந்தி அரசு மகப்​பேறு மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்​து தொடர்ந்​து காவல்துறையினர் வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

நண்பரை கொலைசெய்த கூட்டாளிகள் கோவை காவல்நிலையத்தில் தானே ஆஜர்​ ஆனார்கள்?