in ,

தக்​கலையில் இளம் பெண்னை ஜெபம்என்ற பெயரில் பாலியல் தொல்லை போதகர் கைது..

நாகர்கோவில்:
கன்​னி​யாகுமரி மாவட்​டம் தக்​கலை பகு​தி​யைச் சேர்ந்த (26 வயது) இளம் பெண்​ணுக்கு திரு​மண​மாகி இரண்டு ஆண்​டு​கள் ஆகிறது. அவருக்கு குழந்​தைகள் இல்​லை. உடல்​நலக்​குறைவு ஏற்​பட்​ட​தால், சில மாதங்​களுக்கு முன்பு அவரது தாயார் வீட்​டுக்கு வந்தார். உறவினர்​கள் ஆலோ​சனை​யின் பேரில் மேக்​காமண்​டபம் பகு​தி​யில் உள்ள ஒரு கிறிஸ்தவ சபைக்கு அந்​தப் பெண் சென்​றுள்​ளார். சபை போதகர் ரெஜிமோன்​(வயது 43) என்​பவர், பெண்​ணின் நோய் குண​மாக தனிமை​யில் ஜெபம் செய்ய வேண்​டும் என்று கூறி​யுள்​ளார். இதை நம்​பிய பெற்​றோர், மகளை மட்​டும் ஜெபம் செய்ய அனுப்​பி​யுள்​ளனர். அப்​போது போதகர் ரெஜிமோன், பெண்ணை பலாத்​காரம் செய்ய முயன்​றுள்​ளார். அந்​தப் பெண் போதகரின் பிடியி​லிருந்து தப்​பித்து வெளியே ஓடி வந்​துள்​ளார். இது தொடர்​பாக தக்​கலை காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது. காவல்துறையினர் விசா​ரணை நடத்​தி, போதகர் ரெஜிமோனை கைது செய்​து, நாகர்​கோ​வில் சிறை​யில் அடைத்​தனர். போதகர் ரெஜிமோன் மீது மேலும் பல பாலியல் புகார்​கள் வந்​துள்​ளன. தொடர்ந்து காவல்துறையினர் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கேரளாவைச் சேர்ந்த பயணியிடம் திருச்சி விமான நிலையத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான அதி நவின கஞ்சா பறிமுதல்..

திருமலா பால் நிறுவனத்தின் மேலாளர் ரூ.40 கோடி கையாடல் இவர் கொலையா? தற்கொலைய? காவல்துறை தீவிர விசாரணை..