in ,

கேரளாவைச் சேர்ந்த பயணியிடம் திருச்சி விமான நிலையத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான அதி நவின கஞ்சா பறிமுதல்..

திருச்சி:
​திருச்சி விமான நிலை​யத்​தில் கேரளாவைச் சேர்ந்த பயணி ஒரு​வரிட​மிருந்து ரூ.12 கோடி மதிப்​பிலான, 11.8 கிலோ ஹைட்ரோ கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. பொது​வாக தங்​கக் கடத்​தல் அதி​க​மாக நடக்​கும் இந்த விமான நிலை​யத்​தில், தற்​போது உயர்ரக கஞ்​சாவை கடத்தி வரு​வதும் அதிகரித்து வரு​கிறது. ​தாய்​லாந்து தலைநகர் பாங்​காக்​கில் இருந்​து, மலேசிய தலைநகர் கோலாலம்​பூர் வழி​யாக திருச்சி விமான நிலை​யத்​துக்கு ஏர் ஏசியா விமானத்​தில் வந்த பயணி​கள் மற்​றும் அவர்​களது உடைமை​களை வான் நுண்​ணறிவு சுங்​கத் துறை அதி​காரி​கள் சோதனை செய்​தனர். அப்​போது, கேரளாவைச் சேர்ந்த பயணி ஒரு​வரின் உடைமை​யில், 11.8 கிலோ எடை​உள்ள ஹைட்​ரோ​போனிக் வகை கஞ்சா இருப்​பது தெரிய​வந்​தது. ரூ.12 கோடி மதிப்​பிலான அந்த உயர் ரக கஞ்​சாவைப் பறி​முதல் செய்து அதி​காரி​கள், அதை கடத்தி வந்த பயணி​யிடம்​ வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

அமெரிக்க தொழிலதிபரிடம் ரூ.4.36 கோடி மோசடி செய்த இரண்டு பேர் கைது

தக்​கலையில் இளம் பெண்னை ஜெபம்என்ற பெயரில் பாலியல் தொல்லை போதகர் கைது..