in

ஜவ்வாதுமலையில் குடும்ப தகராறில் விவசாயி கொலை : மனைவி உட்பட 4 பேர் கைது

murder

போளூர்:

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் குடும்ப தகராறில் விவசாயியை அடித்துக்கொன்ற மனைவி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை அடுத்த ஜமுனாமரத்தூர் அருகே உள்ள புதுரான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர்(40), விவசாயி. இவரது மனைவி லதா(38). சங்கர் போதைக்கு அடிமையாகி, எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், மனைவி லதா கோபித்துக் கொண்டு கல்யாண மந்தையில் உள்ள தாய் வீட்டுக்குச் செல்வதும், மீண்டும் வருவதுமாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று குடிபோதையிலிருந்த சங்கர் தனது மனைவி லதா மற்றும் குழந்தைகளை எட்டி உதைத்தாராம். இதனை லதா தடுத்தும் கேட்கவில்லையாம். இதனால் வேதனையடைந்த அவர் கல்யாண மந்தையில் உள்ள தனது தம்பிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில், லதாவின் தம்பிகள் பிரபு(32), செந்தில்(28) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த உறவினர் ஆனந்தன்(24) ஆகியோர் அவரது வீட்டிற்குச் சென்று சங்கரைத் தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது சங்கர், அவர்களைத் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆவேசமடைந்த லதா உட்பட 4 பேரும் விறகாலும், கற்களாலும் சங்கரைச் சரமாரியாகத் தாக்கினார்களாம். இதில், படுகாயம் அடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த சங்கரின் தம்பி ஏழுமலை என்பவர் ஜமுனாமரத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போளூர் டிஎஸ்பி மனோகரன், ஜமுனாமரத்தூர் சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர், சங்கர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து லதா, அவரது தம்பிகள் பிரபு, செந்தில் மற்றும் உறவினர் ஆனந்தன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பின்னர், அவர்களை போளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மாணவர்களுக்கு கஞ்சா – வாலிபர் கைது

வேலூர் அருகே சொத்து தகராறை தடுக்க முயன்ற மேஸ்திரி கொலை