in ,

நண்பரை கொலைசெய்த கூட்டாளிகள் கோவை காவல்நிலையத்தில் தானே ஆஜர்​ ஆனார்கள்?

கோவை:
கோவை​யில் வசிக்​கும் பால​முரு​கன், முரு​கப்​பெரு​மாள் ஆகியோர் கடந்த சில தினங்​களுக்கு முன் செட்​டிப்​பாளை​யம் காவல்​நிலை​யத்​துக்கு சென்​று. கடந்த 2 மாதங்​களுக்கு முன்பு தாங்​கள் ஒரு​வரை கொன்று கிணற்றில் போட்டுவிட்டதாக கூறி சரண் அடைந்​தனர். காவல்துறையினர் கிணற்​றில் இருந்து அழுகிய நிலை​யில் இளைஞர் சடலத்தை மீட்டு இரு​வரை​யும் கைது செய்து விசா​ரணை மேற்​கொண்​டனர். விசாரணையின் போது திருநெல்​வேலி மாவட்​டத்​தைச் சேர்ந்த நண்பர்கள் நியூட்​டன்​ (28வயது), பெனிட்​டோ (27வயது) சென்னை அண்ணா நகரில் தங்​கி வேலைப்பார்த்து வந்​தனர். அங்கு வந்த மற்றொரு நண்பரான ஜெய​ராமன் ​(24வயது) வேலைக்காக நியூட்​டன் ஓர் ஆட்​டோவை ஏற்​பாடு செய்து கொடுத்​துள்​ளார். ஆனால் ஜெய​ராமன் அதை முறை​யாக ஓட்​டா​மல் குடித்துவிட்டு சுற்​றித்​திரிந்​துள்​ளார். இதனால் ஆத்திரத்தில் நியூட்​டன் தாக்​கிய​தில் ஜெய​ராமன் உயி​ரிழந்​தார். பின்னர் கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்த பாலமுருகன், அவரது நண்பர் முருகப்பெருமாள் ஆகியோர் உதவியுடன் ஜெய​ராமனின் சடலத்​தை, மலுமிச்​சம்​பட்​டி​யிலுள்ள கிணற்றில் அவரது உடலில் கல்லை கட்டி போட்டுவிட்டதாக கூறியுள்ளனர். பின்னர் பால​முரு​கன் இவ்​விவ​காரத்தை கூறி நியூட்​டன், பெனிட்​டோ​விடம் பணம் கேட்டு அடிக்​கடி மிரட்​டி​யுள்​ளார். ஓரிரு முறை பணம் கொடுத்த அவர்​கள் பின்​னர் தராததால் பால​முரு​க​னும், முரு​கப்​பெரு​மாளும் செட்​டி​பாளை​யம் காவல்நிலையத்தில் சரணடைந்​தனர். விசாரணையில் நியூட்​டன், பெனிட்டோ ஆகியோ​ருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிந்ததால் அவர்களையும் கைது செய்​தனர். நால்​வரும் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்​.

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

நாமக்கல் வாலிபர் தற்கொலை பல மோசடி திருமண செய்த பெண் உட்பட ஆறு பேர் கைது..

காதலர்கள் கள்ள உறவில் பிறந்த குழந்தையை வைத்து நாடகம் காவல்துறை தீவிர விசாரணை..