வேலுார்:
வேலூர் அருகே சொத்து தகராற்றைத் தடுத்த கட்டிட மேஸ்திரி அடித்துக்கொலைசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் செம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுமார்(52). இவரது சகோதரர் மூர்த்தி(46). இருவரும் விவசாயிகள். இவர்களுக்கிடையே வீட்டுமனை பாகப்பிரிவினை தொடர்பாக நீண்ட காலமாகப் பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 10-ம்தேதி வீட்டின் நுழைவாயிலில் இரும்புகேட் வைப்பது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் கட்டை, இரும்பு கம்பி, கத்தியால் தாக்கிக்கொண்டனர். இதில் சுகுமாருக்கு தலை, தோள்பட்டை காலில் படுகாயம் ஏற்பட்டது. தகராற்றைத் தடுக்க வந்த சுகுமாரின் உறவினர்களான முரளி, விஷ்ணு ஆகியோரும் தாக்குதலில் படுகாயமடைந்தனர்.
அதேபோல் மூர்த்தி மனைவி மல்லிகா, மகன்கள் கோகுல், தினேஷ் ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருதரப்பினரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து அரியூர் போலீசில் இருதரப்பினரும் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் மூர்த்தி, அவரது மனைவி மல்லிகா, மகன் கோகுல், தினேஷ், ஆதித்யன், கலைச்செல்வன் ஆகியோரும், மற்றொரு தரப்பில் சுகுமார், அவரது மகன் சந்தோஷ், சரத்குமார், முரளி, கவுசல்யா மற்றும் ஆர்த்தி ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து செய்தார். இந்நிலையில் மூர்த்தியின் மனைவி மல்லிகா, மகன் கோகுல், கோகுலின் நண்பரான கடலூர் மாவட்டம் குடிகாடு பகுதியைச் சேர்ந்த ஆதித்யன்(20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் படுகாயம் அடைந்து வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுகுமாரின் உறவினரான விஷ்ணு (33) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கைக் கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
GIPHY App Key not set. Please check settings