in ,

மூன்று மாதத்தில் மணப்பெண் தற்கொலை கணவர், மாமனார், மாமியார் மூன்று பேர் கைது..

திருப்பூர்:
அவி​நாசி கைகாட்​டிபுதூர் ஜெயம் கார்​டன் பகு​தி​யைச் சேர்ந்​தவர் கவின்​குமார். இவரது மனைவி ரிதன்யா (வயது 27). இவர்​களுக்கு திரு​மணம் நடை​பெற்​று மூன்று மாதங்​கள் ஆகிறது இந்​நிலை​யில் மொண்​டி​பாளை​யம் அருகே காரில் விஷமருந்தி ரிதன்யா தற்​கொலை செய்து கொண்​டார். இறப்​ப​தற்கு முன்​பாக ரிதன்யா தனது தந்​தைக்கு அனுப்​பிய வாட்​ஸ்​அப் ஆடியோ பதி​வில் நான் தற்​கொலை செய்து கொள்​வதற்கு காரணம் திருமண வாழ்க்​கை​தான். கணவர் கவின்​கு​மார், மாம​னார் ஈஸ்​வரமூர்த்​தி, மாமி​யார் சித்​ராதேவி ஆகியோர்​தான் தற்​கொலைக்கு காரணம் என்று தெரி​வித்​திருந்​தார். அவி​நாசி அரசு மருத்​து​மனை​யில் ரிதன்​யா​வின் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு வைக்​கப்​பட்ட நிலை​யில் அங்கு வந்த கவின்​கு​மார் மற்​றும் அவரது குடும்​பத்​தினரை ரிதன்​யா​வின் உறவினர்​கள் முற்​றுகை​யிட்​டு தாக்க முயன்​றனர். அவர்​களை காவல்துறையினர் மீட்​டு அங்​கிருந்து அனுப்பி​வைத்​தனர். ரிதன்​யாவை துன்​புறுத்​தி, தற்​கொலைக்கு தூண்​டிய​தாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்​து கணவர் கவின்​கு​மார், மாம​னார் ஈஸ்​வரமூர்த்தி ஆகியோரைக் கைது செய்​தனர். ரிதன்​யா​வின் தந்தை அண்​ணாதுரை கூறியது உடல் ரீதி​யாக​வும், மன ரீதி​யாக​வும் என் மகளை மிக​வும் கொடுமைப்​படுத்தி உள்​ளனர். திரு​மணத்​தின்​போது கணக்​கின்றி நகை போட்​டும் இன்​னும் நகை கேட்டு வீட்​டுக்​குள் பூட்டி வைத்து சித்​ர​வதை செய்​துள்​ளனர். என் மகளுக்கு நிகழ்ந்​தது​போல இனி யாருக்​கும் நடக்​கக் கூடாது. ரிதன்யா இறப்​புக்கு உரிய நீதி கிடைக்க வேண்​டும் என்​றார். திரு​மண​மான மூன்று மாதத்​தில் ரிதன்யா தற்​கொலை செய்து கொண்​ட​தால் திருப்​பூர் கோட்​டாட்​சி​யர் இதுகுறித்து விசா​ரித்து வரு​கிறார். அவர் கூறும்​போது ரிதன்யா மரணம் தொடர்​பாக பெண் வீட்​டார் தரப்​பிலும், காவல்துறையினர் தரப்​பிலும் விசா​ரிக்​கப்​பட்​டுள்​ளது. அடுத்​தகட்​ட​மாக, மாப்​பிள்ளை வீட்​டார் தரப்​பில் வி​சா​ரிக்​கப்​படும். வி​சா​ரணை அறிக்கை அடிப்​படை​யில் நடவடிக்கை எடுக்​கு​மாறு அவி​நாசி காவல்​ துணை கண்​காணிப்​பாள​ருக்​கு கூறியுள்ளார். ரிதன்​யாவை துன்​புறுத்​தி, தற்​கொலைக்கு தூண்​டிய​தாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்​து கணவர் கவின்​கு​மார், மாம​னார் ஈஸ்​வரமூர்த்தி ஆகியோரைக் கைது செய்​தனர்.

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

காவல்துறையைச்சார்ந்த ஆறு பேர் கோவில் காவலாளி மரணத்திற்க்காக பணி நீக்கம்

காவல்துறை உதவி ஆய்வாளர் 8 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை சென்னையில் பரபரப்பு..