in ,

அமெரிக்க தொழிலதிபரிடம் ரூ.4.36 கோடி மோசடி செய்த இரண்டு பேர் கைது

சென்னை:
தி.நகரைச் சேர்ந்தவர் ரவி (வயது 64). இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் வெளிநாட்டில் வசித்து வரும் தொழில் அதிபரான விஜய் ஜானகிராமன் மற்றும் மல்லிகா ஜானகிராமன் ஆகியோரின் வங்கிக் கணக்குகளை பொது அதிகாரத்தின் அடிப்படையில் பராமரித்து வருகிறேன். இவர்கள் இருவரும் அண்ணா நகரில் உள்ள தனியார் வங்கிக் கிளை ஒன்றில் கணக்கு வைத்துள்ளனர். அவர்களது வங்கிக் கணக்கில் உள்ள ரூ.4 கோடியே 36 லட்சத்தை அவர்களது அனுமதியின்றி ஆறு வங்கிக் கணக்குகளுக்கு பணப்பரிவர்த்தனை செய்து மோசடி செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடையவர்களை கைது செய்து மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டுத் தர வேண்டும் எனப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவில் உள்ள வங்கி மோசடி புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த மோசடிக்கு காரணமாக செயல்பட்டது அண்ணா நகர் வங்கிக் கிளையின் மேலாளராக பணியிலிருந்த மஞ்சுளா என்பது தெரியவந்தது. அவர் தனது கூட்டாளிகளான அயனாவரத்தைச் சேர்ந்த நாகேஷ்வரன் (வயது 52), தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறுமுக குமார் (வயது 63) மேலும் சிலருடன் சேர்ந்து இந்த பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. நாகேஷ்வரன் கைது செய்யப்பட்ட நிலையில், ஆறுமுக குமார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவர் சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள மஞ்சுளா மற்றும் அவரது கூட்டாளிகளை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மது போதையில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை இருவர் கைது

கேரளாவைச் சேர்ந்த பயணியிடம் திருச்சி விமான நிலையத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான அதி நவின கஞ்சா பறிமுதல்..