in ,

பெண் வழக்கறிஞருக்கு பாலியல் தொல்லை! தனியார் பயிற்சி மைய இயக்குநர் கைது..

சென்னை:
பெண் வழக்கறிஞருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, உரிமையியல் நீதிபதி தேர்வு தனியார் பயிற்சி மைய உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
வேளச்சேரி தனியார் உரிமையியல் நீதிபதி தேர்வு பயிற்சி மையம் உள்ளது. சந்திரசேகர் (வயது 50) உரிமையியல் நீதிபதி தேர்வு தனியார் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இப்பயிற்சி மையத்தில் சுமார் 40 பேர் படித்து வருகின்றனர். இப்பயிற்சி மையத்தில் படிக்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் வேளச்சேரி காவல் நிலையத்தில் அண்மையில் ஒரு புகார் அளித்தார். அதில் பயிற்சி மையத்தின் உரிமையாளர் சந்திரசேகர் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் பாலியல் துன்புறுத்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்தனர்.

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

செம்மரக்கடத்தல் மன்னன் வெங்கடேசன் என்ற மிளகாய் பொடி வெங்கடேசன் குண்டர் சட்டத்தில் கைது..

பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைது: காவல்துறையினர் தீவிர விசாரணை..