in ,

கிருஷ்ணகிரியில் சுற்றுலவுக்கு வந்த ஜோடியை பலாத்காரம் செய்த குற்றத்திற்கு துப்பாக்கிசூடு நடத்தி வாலிபர்கள் கைது…

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் பின்புறம் சையத் பாஷா மலைக்கு, திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த ஆண்(35வயது), உறவுக்கார பெண்ணுடன் (30வயது) சென்றுள்ளார். மலையின் மேற்பகுதிக்கு சென்றபோது, அங்கு மதுபோதையில் இருந்த நான்கு இளைஞர்கள், இவர்களை மறித்து, கத்தியை காட்டி மிரட்டி, அந்த பெண் அணிந்திருந்த தங்கநகைகல் உள்ளிட்டவைகளை பறித்தனர். அந்த ஆண் வைத்திருந்த ரொக்கம் ரூ.7 ஆயிரத்தை பறித்துக்கொண்டதுடன், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.7 ஆயிரத்தை கூகுள் பே மூலம், தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளனர்.

அந்த நான்கு பேரில் 2 பேர் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதை 2 பேர் தாங்கள் வைத்திருந்த செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அந்த ஆணும், பெண்ணும் மலையில் இருந்து கீழே இறங்கி வந்துள்ளனர். அப்போது அந்த பெண் அழுதவாறு சம்பவத்தை கூறிவிட்டு சென்றுவிட்டார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மலையடிவாரத்தில் இருந்த பொதுமக்கள், கிருஷ்ணகிரி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்பகுதியில் உள்ள டவரில் பதிவான செல்போன் எண்களை கொண்டு விசாரணை மேற்கொண்டதில், பாதிக்கப்பட்டவர்கள் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து, கூகுள் பே மூலம் பணம் யாருடைய செல்போனுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது குறித்து விவரம் சேகரித்தனர்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியை சேர்ந்த கலையரசன் (21வயது) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் பிடித்து வந்து, காவல் நிலையத்தில் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அவர் காவலரிடம் நண்பர் அபிஷேக் (20வயது) என்னுடன் இருந்தார். அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது கிருஷ்ணகிரியை சேர்ந்த சுரேஷ்(22வயது), நாராயணன் (21வயது) என ஒப்புக்கொண்டார். இதையடுத்து கலையரசன் மற்றும் அபிஷேக் ஆகிய 2 பேரையும் கைது செய்த காவலர், சுரேஷ் மற்றும் நாராயணன் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின்படி, பெருமாள் கோயில் பின்புறம் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

காவலர் வருவதை கண்ட சுரேஷ், நாராயணன் ஆகியோர் தாங்கள் வைத்திருந்த கத்தியால் காவலரை தாக்கி விட்டு தப்பியோடினர். உடனே காவலர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு, சரணடையுமாறு எச்சரித்தனர். ஆனால் சுரேசும், நாராயணனும் தப்பி ஓடினர். இதையடுத்து காவலர் துப்பாக்கியால் சுட்டதில், சுரேஷ் வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தான். நாராயணன் கீழே விழுந்ததில் வலது காலில் முறிவு ஏற்பட்டது.

மேலும் காயம் அடைந்த காவலர்கல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட சுரேஷ், கால் முறிந்த நாராயணன் ஆகியோரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். துப்பாக்கி சூடு நடந்த இடத்தை மாவட்டகாவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

தூத்துக்குடி காவல்துறை வேட்டையில் கஞ்சா கடத்தி வந்தஇருவர் அதிரடி கைது…

பெரியப்பாவைக் கொன்று துண்டாக வெட்டி குளத்தில் வீசியவர் கைது: அவினாசியில் பரபரப்பு