in ,

சேலத்தில் மனைவியை சந்தேகத்தில் கொன்ற கணவன் மகன்கள் கைது!!

சேலம்:
வாழப்பாடியை சேர்ந்த கூலித் தொழிலாளி பொன்னுவேல் மனைவி வசந்தி இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். வசந்தி அடிக்கடி செல்போனில் யாரிடமோ மணிக்கணக்கில் பேசி வந்துள்ளார். இதுகுறித்து கணவன் பொன்னுவேல் மற்றும் அவரது மகன்கள் வசந்தியிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வசந்தியை கணவன் மற்றும் இரண்டு மகன்களும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த வசந்தி மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் வசந்தியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வசந்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வசந்தியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பொன்னுவேல் மற்றும் அவரது இரண்டு மகன்களையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கூலிப்படை வைத்து மனைவியைத் தீர்த்துக் கட்டிய தொழிலதிபர் – கள்ளக்காதலுக்காக அரங்கேறிய கொலை

மத்தியப் பிரதேச விபத்தில் – 5 பேர் பலி