கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 9 மற்றும் 10 வயது மாணவிகள் 2 பேர் அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். அதே ஊரில் 13 வயது முதல் 16 வயது வரை உள்ள 4 சிறுவர்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக 4 பேரும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்து உள்ளனர். இதை அறிந்தவர்கள் 1098-க்கு என்ற குழந்தைகளுக்கான உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். அதன் பேரில் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. விசாரணையில் 4 சிறுவர்களும் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள், செல்போனில் ஆபாசப் படங்களைப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்ததும், அந்த படங்களைப் பார்த்து, அரையாண்டு தேர்வு விடுமுறையின்போது மாணவிகளைத் தனியாக அழைத்துச் சென்று தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 சிறுவர்களையும் கைது செய்தனர். பின்னர் 4 சிறுவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர்.
GIPHY App Key not set. Please check settings