Child abuse
in

14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: அதிர்ச்சி சம்பவம்

14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் கொரபுட் மாவட்டம் காசிபூர் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனது தோழிகளுடன் அருகே உள்ள கிராமத்தில் தெருக்கூத்து நிகழ்ச்சி பார்க்கச் சென்றுள்ளார். இரவு நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது அந்த சிறுமி இயற்கை உபாதை கழிக்கச் சென்றுள்ளார்.

அப்போது, அந்த சிறுமியைப் பின்தொடர்ந்து வந்த 4 இளைஞர்கள், சிறுமியைக் கடத்தினர். பின்னர், அருகில் உள்ள மலைப்பகுதிக்குச் சிறுமியைக் கடத்திச்சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அந்த கும்பலிடமிருந்து தப்பிய பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்த கொடூரம் குறித்துப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதியை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா ஒப்புதல்

சிவகங்கையில் கொடூரம்: பட்டியலின கல்லூரி மாணவரின் கைகளை வெட்டிய கும்பல்