in ,

போன் பேசிய மனைவியை கரண்டியால் அடித்தே கொன்ற கணவன்

விருதுநகர:

செல்போனில் அதிக நேரம் பேசிக்கொண்டிருந்த மனைவியை, மதுபோதையில் இருந்த கணவன் கரண்டியால் அடித்தே கொலை செய்த பயங்கர சம்பவம் விருதுநகரில் அரங்கேறியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அடுத்த கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் காய்கறி வியாபாரி பார்த்திபன், இவரது மனைவி ராசாத்தி, இவர்களுக்கு இரண்டுக் குழந்தைகள் உள்ள நிலையில் தம்பதியர் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று பார்த்திபன் அதிகளவில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, மனைவி ராசாத்தி, அதிக நேரம் போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த பார்த்திபன், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, ஆத்திரத்தில் கரண்டியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த ராசாத்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ராசாத்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், வழக்குபதிவு செய்து மனைவியை தாக்கிய பார்த்திபனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ரயில்வே ஊழியர் வீட்டில் திருட்டு : கைவரிசைக்காட்டிய 3 பேர் கைது

குடிக்க பணம் தராத பெரியப்பாவை துண்டு துண்டாக அறுத்து கொலை செய்த கொடூர இளைஞர்