in

விழுப்புரத்தில் பரபரப்பு.. பக்கத்து வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ஏசி மெக்கானிக்… 3 பேர் அதிரடி கைது..!

விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட கீழ் புத்துப்பட்டு ஊராட்சி, நம்பிக்கை நல்லூர் மீனவ கிராம பகுதியில் 48 வயதுடைய புகழேந்தி வாழ்ந்து வந்தார்.

இவர் தன்னுடைய பக்கத்து வீட்டில் இருக்கும் சுரேந்தர் என்பவரது வீட்டில் அவர் இல்லாத நேரம் பார்த்து சென்ற நவம்பர் மாதம் 24 ஆம் நாள் அன்று அத்துமீறி உள்ளே நுழைந்ததாக தகவல்கள் வந்தது. இது தொடர்பாக சுரேந்தர் மனைவி திவினா (27) கோட்டகுப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது புகழேந்தி மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து இரு தரப்பினரும் சமாதானமாக சென்றனர்.

இந்நிலையில் புகழேந்தியின் மூன்றாவது மகனான மதன் (21) ஏசி மெக்கானிக் வேலை செய்து வருகிறார். கடந்த 19 ஆம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து 2 பெரிய பாட்டிலில் பெட்ரோல் குண்டு எடுத்து கொண்டு சுரேந்தரும் அருகில் இருந்த அவரது தம்பி சுமன் வீட்டில் வீசிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதில் சுரேந்தர் மற்றும் சுமன் வீட்டின் வாசல் படி தீயினால் எரிந்ததில் வீட்டில் உள்ள பொருட்கள் சேதமானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் காவலர்களுடன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இதனையடுத்து, புகழேந்தியை கைது செய்தனர். பெட்ரோல் குண்டு வீசிய புகழேந்தியின் மூன்றாவது மகன் மதனையும் அவரது நண்பர்களான அதே ஊரை சேர்ந்த டேனியல் பாரதி, கூனிமேட்டை சேர்ந்த முகுந்தன் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் 10 நாட்களுக்கு பிறகு கீழ்புத்துப்பட்டு அய்யனாரப்பன் கோயில் பின்புறம் உள்ள குளத்துக்கு அருகே உள்ள கருமாதி கொட்டகைக்கு மேல் பதுங்கி இருப்பதாக கோட்டகுப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு போலீசார் சென்றதும், பதுங்கி இருந்த மதன் மற்றும் அவரது நண்பர்களான டேனியல் பாரதி, முகுந்தன் ஆகியோர் கருமாதி கொட்டகையில் இருந்து குதித்து தப்பியோட முயன்றனர்.

அப்போது மதன், டேனியல் பாரதி ஆகியோருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனார். பின்னர் 3 பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை: வாலிபருக்கு மரண தண்டனை!

மதுரை மாவட்டத்தில் ஆன்லைன் லாட்டரி விற்ற தலைமை காவலர் கைது…