in ,

பெண் நடன கலைஞரை அடைத்துவைத்து தாக்கிய நடன பயிற்சி கும்பல்

கரூரில் பெண் நடன கலைஞரை தனியார் நடன பயிற்சி நிறுவனர் மூன்று நாட்களாக அடைத்து வைத்து இரும்பு கம்பியால் தாக்கியும் வன்கொடுமை படுத்தியுள்ளார் அவரை ஜாமினில் வெளியே வரமுடியாத வழக்கின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் கலை இலக்கிய தமிழ்நாடு சார்பில் முசிறி தாலுகாவில் உள்ள ஸ்டார் என்ற நடன குழுவின் உரிமையாளர் மதி என்ற மதியழகன். இவர் நடன பயிற்சி வகுப்பு நடத்தி வருகின்றார்.

பெண் நடன கலைஞரான ஜெயஸ்ரீயை அவரது வீட்டில் 3 நாட்களாக அடைத்துவைத்து மதி மற்றும் அவரது கூட்டாளிகளான பிரவீன், ப்ரீத்தி ஆகியோர் இரும்பு பைப் மற்றும் பட்டாகத்தி ஆகியவற்றில் அடித்து காயப்படுத்தியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த ஜெயஸ்ரீ அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாதிக்கப்பட்ட மேடை நடன கலைஞர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஐந்து வழக்குகளில் மதியழகன் பெயரில் வழக்கு பதிவு செய்து தேடும் குற்றவாளியாக தற்போது வரை கைது செய்யவில்லை. ஜெயஸ்ரீயின் வீட்டிற்கு சென்று அவருக்கு சொந்தமான மேக்கப் பொருட்கள், அவரது உடைமைகளை எடுத்துச் சென்றவர்களை கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் நடன கலைஞர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

காவல்துறையில் மீண்டும் தலை தூக்கும் கூடுதல் பணிச்சுமை

தர்மபுரி அருகே உரிய ஆவணங்கள் இல்லாததால் 16 கிலோ தங்கம் பறிமுதல்