in ,

ரயில்வே ஊழியர் வீட்டில் திருட்டு : கைவரிசைக்காட்டிய 3 பேர் கைது

தூத்துக்குடி:

கோவில்பட்டியில் ரயில்வே ஊழியர் வீட்டில் 16 சவரன் நகை திருடிய வழக்கில் 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி முத்து நகரை சேர்ந்தவர் சுந்தர். சென்னையில் ரயில்வே துறையில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அருள்சாந்தி. இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்ருந்தார் பின்னர் வீடு திரும்பியபோது, கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த சுமார் 16 சவரன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய கோவில்பட்டி அருகே கூசாலிப்பட்டி மேட்டுத் தெருவை சேர்ந்த இசக்கியப்பன் மகன் வானுபாபு என்ற பாபு (வயது34), திருநெல்வேலி மாவட்டம், களக்காடு கக்கன் நகர் மேலத் தெருவைச் சேர்ந்த சுரேஷ் மனைவி இந்திரா (49), அதே பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் மனைவி சகிதா (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்தனர்.

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மயிலாடுதுறையில் பரபரப்பு … மாண்டவர் மீண்டார்! அரசு அதிகாரிகள் கலக்கம்…

போன் பேசிய மனைவியை கரண்டியால் அடித்தே கொன்ற கணவன்