in ,

மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம்!.அரசு அதிகாரிகள் விழிப்புணர்வு!. நிகழ்ச்சியில் போட்டுக்கொடுத்த மாணவிகள்! சேலத்தில் அதிரடி!!

சேலம்:
ஏற்காடு மையப்பகுதியில் அமைந்துள்ள அரசு ஏகலைவா பள்ளியில் பாலியல் அச்சுறுத்தல்கள் குறித்து சேலம் குழந்தைகள் நல அலுவலர்கள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது மாணவிகளிடம், பாலியல் சீண்டல் ஏதாவது இருந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் என்றும் இதனால் உங்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பொழுது எழுந்து நின்ற 10க்கும் மேற்பட்ட மாணவிகள், தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்து புகார் தெரிவித்தனர். அடிக்கடி அறிவியல் ஆசிரியர் இளையகண்ணு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக அவர்கள் கூறினார்கள்.
அறிவியல் ஆசிரியர் இளையகண்ணு மீது குழந்தைகள் நல அலுவலர்கள் சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் ஏகலைவா பள்ளியில் விசாரணை மேற்கொண்டதில் ஆசிரியர் மீதான குற்றம் உறுதியானது, ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

காதலுக்கு எதிர்ப்பு!. திருமணம் ஆன இரண்டு நாளில் புதுமண தம்பதி விபரீத முடிவு!.

தனியார் செவிலியர் மூலம் மாமியாருக்கு விஷம் கொடுத்த மருமகள் அதிரடி கைது!!