in ,

மதுரை மாவட்டத்தில் ஆன்லைன் லாட்டரி விற்ற தலைமை காவலர் கைது…





தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் துண்டுச் சீட்டில் லாட்டரி நம்பரை எழுதிக் கொடுப்பதும், வாட்ஸாப்பில் அனுப்புவதும் என நுாதன முறையில் லாட்டரி விற்பனை செய்து வந்தார் தலைமை காவலர்.

மதுரை பிபீகுளத்தைச் சேர்ந்த பாலாஜி (52), என்பவரை பிடித்து, தல்லாகுளம் காவலர் விசாரித்தபோது ஆன்லைன் மூலம் கேரளா லாட்டரி விற்றது தெரிய வந்தது. மதுரையைச் சேர்ந்த ரஹமத்துல்லா, கனி உள்ளிட்டோர் பாலாஜிக்கு வாட்ஸாப்பில் கேரளா லாட்டரி எண்களை அனுப்புவார். அதை தனது கூட்டாளிகள் மதுரை வீரன், பிரகாஷிற்கு அனுப்பி விற்று வருவதாக பாலாஜி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவரையும், புதுார் கனி (32), என்பவரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த தலைமை காவலர்பிரகாஷ் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

இவர் மதுரை ஆறாவது சிறப்பு பட்டாலியன் படையில் தலைமை காவலராக உள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன் இதே பிரச்னைக்காக பிரகாஷ் மாமூல் வசூலித்து வந்தார். மேலும், சூதாட்டத்திலும் ஈடுபட்டார். இதனால் அவர் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபடுவதால் இப்போது ‘பணிநீக்கம் செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

விழுப்புரத்தில் பரபரப்பு.. பக்கத்து வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ஏசி மெக்கானிக்… 3 பேர் அதிரடி கைது..!

புகார் அளிக்க வந்த பெண்ணுடன் டி.எஸ்.பி. உல்லாசம்: பரவியது வீடியோ… நேர்ந்த கதி?