in ,

தேனி மாவட்டத்தில் கல்லூரி மாணவர் கழிப்பறையில் தற்கொலை…இது கொலையா தற்கொலையா? தந்தை புகார்.

தேனி:
சொக்கநாதபுரம் பகுதியில் அரசு இன்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் பாளையங்கோட்டை சேர்ந்த விக்னேஷ் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். விடுதியில் இருக்கும் கழிப்பறைக்கு சென்ற விக்னேஷ் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் மாணவர்கள் விடுதி காப்பாளர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். ரத்த வெள்ளத்தில் விக்னேஷ் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விக்னேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்குஉடற்கூக்குறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். விக்னேஷின் தந்தை தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை யாராவது கொலை செய்திருக்கலாம் எனவும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிலையில் மீட்பு : மைசூரில் பரபரப்பு

மருத்துவமனையில் இருந்து கொலைக் குற்றவாளி தப்பி ஓட்டம்