in

சிறுவனுக்கு பாலியல்தொல்லை… முதியவருக்கு 20 ஆண்டு சிறை

திண்டுக்கல்
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன்(57) என்பவரை திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீ அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் , நீதிமன்ற தலைமைக் காவலர் வளர்மதி மற்றும் அரசு வழக்கறிஞர் .மைதிலி ஆகியோரின் சீரிய முயற்சியால் திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி, குற்றவாளி சுந்தர்ராஜன் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

What do you think?

-1 Points
Upvote Downvote

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சொத்திற்காக சகோதரர்களை கொன்ற சகோதரி

தெரு நாய் தொல்லையும்… அடங்காத மக்களின் பீதியும்…