in ,

கணவனைக்கொள்ள பள்ளி மாணவர்கலை பயன்படுத்திய மனைவி கைது!

மகாராஷ்டிரா:
யவத்மால் மாவட்டத்தில், சவுசாலா என்ற காட்டுப் பகுதியில் ஒரு ஆணின் உடல், கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி, விசாரணை தொடங்கினர். அந்த உடல் யாருடையது என்பது முதலில் தெரியவில்லை. பின்னர், தீவிர விசாரணையில், அது யவத்மால் நகரை சேர்ந்த (32 வயது) ஆசிரியர் சாந்தனு அரவிந்த் தேஷ்முக்கின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டது. காவல்துறையினர் முதலில் அவரது மனைவி நிதி தேஷ்முக்கிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில், சாந்தனு மற்றும் நிதி காதலித்து திருமணம் செய்தவர்கள். குடும்பத்தினர் இருவரையும் ஏற்கவில்லை. ஆனால் இருவரும் ஒரே பள்ளியில் வேலை பார்த்தனர். நிதி பள்ளியின் தலைமை ஆசிரியராகவும், சாந்தனு அதே பள்ளியில் ஆசிரியராகவும் இருந்தார். திருமண வாழ்க்கையின் ஆரம்பத்தில் சாந்தோஷம் இருந்தது. சாந்தனுவுக்கு மது பழக்கம் இருந்த காரணத்தினால், அவர் மனைவியுடன் தினமும் சண்டையிடத் தொடங்கினார். சாந்தனு அதிகமாக குடிப்பது மற்றும் அவளுடன் அடிக்கடி சண்டையிடுவது போன்றவை நிதியின் பொறுமையைச் சோதித்தன. ஒரு கட்டத்தில், சாந்தனுவை நிரந்தரமாக ஒழித்துக்கட்ட நிதி முடிவு செய்தார். அதற்காக, விஷ மாத்திரைகள் பற்றி ஆன்லைனில் கற்றுக்கொண்டார். ஊட்டச்சத்து மாத்திரை என்ற பெயரில் சாந்தனுவுக்கு விஷம் கலந்த மாத்திரையைக் கொடுத்தார். அதை சாப்பிட்ட சாந்தனு பரிதாபமாக இறந்தார். உடலை எப்படி அப்புறப்படுத்துவது என்று தெரியாமல் தவித்த நிதி, தன்னுடைய டியூஷனில் படித்துக் கொண்டிருந்த மூன்று மாணவர்களிடம் கண்ணீருடன் உதவி கேட்டார். மாணவர்கள் மனம் மாறி, கணவரின் உடலை காட்டிற்கு எடுத்துச் சென்று வீச உதவினார்கள். காவல்துறையினருக்கு உடல் கிடைத்து விட்டாலும், அடையாளம் தெரியக்கூடாது என்ற நோக்கத்தில், மறுநாள் இரவு நிதி மீண்டும் அந்த மாணவர்களுடன் காட்டுப் பகுதிக்கு சென்றார். அப்போது பெட்ரோல் கொண்டு சென்று, கணவரின் உடலுக்கு தீ வைத்து கொலுத்தியுள்ளார். ஆனால், எரியாமல் இருந்த சட்டை வைத்து சாந்தனுவின் உடலை காவல்துறையினர் அடையாளம் கண்டனர். தலைமை ஆசிரியை நிதி தேஷ்முக் கைது செய்யப்பட்டார். உடன் இருந்த மூன்று சிறுவர்கலை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கள்ளத்தனமாக இளம்பெண் கர்பம் மருத்துவமனை கழிவறையில் பிறந்த குழந்தை புதைக்கப்பட்டது?

விவசாய மூதாட்டியை விவசாயநிலத்தில் நகைக்காக கொலைசெய்த வாலிபன் கைது..